Tamil Grammar MCQ Quiz in తెలుగు - Objective Question with Answer for Tamil Grammar - ముఫ్త్ [PDF] డౌన్‌లోడ్ కరెన్

Last updated on Apr 13, 2025

పొందండి Tamil Grammar సమాధానాలు మరియు వివరణాత్మక పరిష్కారాలతో బహుళ ఎంపిక ప్రశ్నలు (MCQ క్విజ్). వీటిని ఉచితంగా డౌన్‌లోడ్ చేసుకోండి Tamil Grammar MCQ క్విజ్ Pdf మరియు బ్యాంకింగ్, SSC, రైల్వే, UPSC, స్టేట్ PSC వంటి మీ రాబోయే పరీక్షల కోసం సిద్ధం చేయండి.

Latest Tamil Grammar MCQ Objective Questions

Top Tamil Grammar MCQ Objective Questions

Tamil Grammar Question 1:

அசை _____ வகைப்படும்.

  1. இரண்டு
  2. மூன்று
  3. நான்கு
  4. ஐந்து

Answer (Detailed Solution Below)

Option 1 : இரண்டு

Tamil Grammar Question 1 Detailed Solution

சரியான பதில்: ​இரண்டு

Key Points

  • எழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து வந்தால் அது அசை எனப்படும்.
  • அசை இரண்டு வகைப்படும்.
  • அவை, நேரசை, நிரையசை ஆகும்.

Additional Information

நேரிசை:

  • குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலோ அல்லது ஒற்றுடன் சேர்ந்து வந்தாலோ அது நேரிசை எனப்படும்.
  • சான்று: நீ, நான்

நிரையசை:

  • இரண்டு குறிலெழுத்துகள் அல்லது குறில், நெடில் எழுத்துக்கள் இணைந்து வந்தாலோ அல்லது அவற்றுடன் ஒற்று எழுத்து சேர்ந்து வந்தாலோ அது நிரையசை எனப்படும்.
  • சான்று: மரம், கிளி, சுறா

Tamil Grammar Question 2:

 “தொல்காப்பியத்திற்கும் நன்னூலுக்கும் என்ன வேறுபாடு?” என்று மாணவன் கேட்டான்

  1. அறியா வினா வாக்கியம்
  2. அறிவினா வாக்கியம்
  3. ஐயவினா வாக்கியம்
  4. கொடைவினா வாக்கியம்

Answer (Detailed Solution Below)

Option 1 : அறியா வினா வாக்கியம்

Tamil Grammar Question 2 Detailed Solution

சரியான பதில்: அறியா வினா வாக்கியம்
Key Pointsஅறியா வினா வாக்கியம்:
  • தெரியாத ஒன்றைப் பற்றித் தெரிந்து கொள்ள வினவுவது அறியா வினா வாக்கியம் ஆகும்.
  • எடுத்துக்காட்டு - தொல்காப்பியத்திற்கும் நன்னூலுக்கும் என்ன வேறுபாடு? என்று மாணவன் கேட்டான் 
வினா ஆறு வகைப்படும். அவை: 
  • அறிவினா
  • அறியா வினா
  • ஐய வினா
  • கொளல் வினா
  • கொடை வினா
  • ஏவல் வினா
Additional Informationஅறிவினா வாக்கியம்:
  • தனக்கு தெரிந்த ஒன்றை பிறர்க்குத் தெரியுமா என அறிய வினவுவது அறிவினா வாக்கியம் ஆகும்.
  • எடுத்துக்காட்டு - திருக்குறளின் ஆசிரியர் யார்? என்று ஆசிரியர் மாணவனிடம் கேட்பது.
ஐயவினா வாக்கியம்:
  • ஐயம் கொண்ட ஒரு பொருளைப் பற்றி தெரிந்து கொள்ள வினவுவது ஐய வினா வாக்கியம் ஆகும்.
  • எடுத்துக்காட்டு - அங்கே இருப்பது முதலையா மரக்கலமா?
கொளல்வினா வாக்கியம்:
  • ஒரு பொருளை பிறரிடம் இருந்து பெற்றுக்கொள்ள பிறரிடம் வினவுவது கொளல்வினா வாக்கியம் ஆகும்.
  • எடுத்துக்காட்டு - பருப்பு இருக்கிறதா? என்று கடைக்கு சென்று வினாவுவது. 
கொடைவினா வாக்கியம்:
  • ஒரு பொருளை பிறர்க்கு கொடுக்க பிறரிடம் வினவுவது கொடைவினா வாக்கியம் ஆகும்.
  • எடுத்துக்காட்டு - செலவுக்கு காசு இருக்கிறதா? என தந்தை மகனிடம் கேட்பது.
ஏவல் வினா வாக்கியம்:
  • ஒரு செயலை செய்யுமாறு வினவுவது ஏவல் வினா வாக்கியம் ஆகும்.
  • எடுத்துக்காட்டு - புத்தகம் எடுத்து வந்தாயா?

Tamil Grammar Question 3:

உரிய முறையில் அமைந்த சொற்றொடர் எது?

  1. மண்ணுயிர்க்கு மழையே ஆகும் ஆதாரம்
  2. ஆதாரம் மழையே மண்ணுயிர்க்கு ஆகும் ஆதாரம்
  3. மழையே மண்ணுயிர்க்கு ஆதாரம் ஆகும்
  4. ஆகும் மழையே ஆதாரம் மண்ணுயிர்க்கு

Answer (Detailed Solution Below)

Option 3 : மழையே மண்ணுயிர்க்கு ஆதாரம் ஆகும்

Tamil Grammar Question 3 Detailed Solution

சரியான பதில்: மழையே மண்ணுயிர்க்கு ஆதாரம் ஆகும்
Key Points
  • எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என்ற முறைப்படி அமைந்திருப்பதே சரியான  சொற்றொடர் ஆகும். 
  • ஆகையால் மழையே மண்ணுயிர்க்கு ஆதாரம் ஆகும் என்பதே சரியான  சொற்றொடர் ஆகும்.
Additional Informationஎழுவாய்:
  • ​ ஒரு செயலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பிடுவது எழுவாய் ஆகும்.
செயப்படுபொருள்:
  • ​ஒரு செயல் பயனை அடைவதைக் குறிப்பிட பயன்படும் சொல் செயப்படுபொருள் ஆகும்.
பயனிலை:
  • ​​ ஒரு செயலின் கருத்தைக் குறிப்பிடுவது பயனிலை ஆகும்.

Tamil Grammar Question 4:

பொருள்:
1. வங்கம் – அ. பகல்
2. நீகான் – ஆ. கப்பல்
3. எல் – இ. கலங்கரை விளக்கம்
4. மாட ஒள்ளெரி – ஈ. நாவாய் ஓட்டுபவன்

  1. 1.ஆ, 2.இ, 3.ஈ, 4.அ
  2. 1 ஈ, 2. இ, 3. அ, 4. ஆ
  3. 1.ஆ, 2.ஈ, 3.அ, 4.இ
  4. 1.ஆ, 2. அ, 3. ஈ, 4. இ

Answer (Detailed Solution Below)

Option 3 : 1.ஆ, 2.ஈ, 3.அ, 4.இ

Tamil Grammar Question 4 Detailed Solution

சரியான பதில்: 1. ஆ, 2. ஈ, 3. அ, 4. இ

Key Points

  • வங்கம் கப்பல்
  • நீகான் - நாவாய் ஓட்டுபவன்
  • எல் - பகல்
  • மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்

Additional Information

  • வங்கூழ் என்ற சொல்லின் பொருள் காற்று ஆகும்.
  • மதலை என்ற சொல்லின் பொருள் தூண் ஆகும்.
  • அழுவம் என்ற சொல்லின் பொருள் கடல் ஆகும்.
  • கரையும் என்ற சொல்லின் பொருள் அழைக்கும் ஆகும்.

Tamil Grammar Question 5:

சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக:

  1. ஓடாக் குதிரையை இனி தொட்டுப் பார்க்கக் கூடாது
  2. ஓடாக் குதிரையை இனித் தொட்டு பார்க்கக் கூடாது
  3. ஓடா குதிரையை இனித் தொட்டுப் பார்க்கக் கூடாது
  4. ஓடாக் குதிரையை இனித் தொட்டுப் பார்க்கக் கூடாது

Answer (Detailed Solution Below)

Option 4 : ஓடாக் குதிரையை இனித் தொட்டுப் பார்க்கக் கூடாது

Tamil Grammar Question 5 Detailed Solution

சரியான பதில்: ஓடாக் குதிரையை இனித் தொட்டுப் பார்க்கக் கூடாது
Key Points
  • இனி, தனி என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும். 
  • ஆகையால் இனித் தொட்டு என்பது சரியானது ஆகும்.
  • குறிலைச்சார்ந்து வரும் ஆகாரச்சொற்கள் பின் வல்லினம் மிகும்.
  • ஆகையால் ஓடாக் குதிரையை என்பது சரியானது ஆகும்.
  • வன்தொடர்க் குற்றியலுகரத்திற்குப் பின் வரும் வல்லினம் மிகும்.
  • ஆகையால் தொட்டுப் பார்க்கக் கூடாது என்பது சரியானது ஆகும்.
  • எனவே ஓடாக் குதிரையை இனித் தொட்டுப் பார்க்கக் கூடாது என்பது சந்திப் பிழை இல்லாத தொடர் ஆகும்.
Additional Informationவல்லினம் மிகும் இடங்கள்:
  • இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
  • உவமைத்தொகையில் வல்லினம் மிகும்.
  • உருவகத்தில் வல்லினம் மிகும்.
  • ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின்வரும் வல்லினம் மிகும்.

Tamil Grammar Question 6:

பகுபதத்தில் குறைந்தளவு/கட்டாயமாக இருக்க வேண்டிய உறுப்புகள்?

  1. பகுதி, சந்தி
  2. இடைநிலை, சாரியை
  3. பகுதி, விகுதி 
  4. விகுதி, சாரியை

Answer (Detailed Solution Below)

Option 3 : பகுதி, விகுதி 

Tamil Grammar Question 6 Detailed Solution

சரியான பதில் பகுதி, விகுதி
Key Points
  • பகுபதத்தில் குறைந்தளவு/கட்டாயமாக இருக்க வேண்டிய உறுப்புகள் பகுதி, விகுதி
Additional Information
  •  பகுபதம்:
    • மேலும் பிரித்தால் பொருள் தரக் கூடிய சொல் பகுபதம் எனப்படும்
    • பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்பன பகுபத உறுப்புகள் ஆகும்.
  • பகாப்பதம்:
    • மேலும் பொருள்தரக்கூடிய சொற்களாகப் பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் எனப்படும்.

Tamil Grammar Question 7:

‘யாண்டுளனோ?’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………

  1. யாண்டு + உளனோ?
  2. யாண் + உளனோ ?
  3. யா + உளனோ?
  4. யாண்டு + உனோ?

Answer (Detailed Solution Below)

Option 1 : யாண்டு + உளனோ?

Tamil Grammar Question 7 Detailed Solution

சரியான பதில்: யாண்டு + உளனோ?

Key Points

  • யாண்டுளனோ? - யாண்டு + உளனோ?
  • யாண்டு (ட் + உ) + உளனோ? - யாண்ட் + உளனோ? - 'உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்' என்னும் விதிப்படி நீங்கியது.
  • யாண் (ட் + உ) ளனோ? -  யாண்டுளனோ? - 'உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி யாண்டுளனோ? எனப் புணர்ந்தது.

Additional Informationபாசிலை:

  • பாசிலை - பசுமை + இலை
  • பசுமை + இலை - பசு + இலை - 'ஈறுபோதல்' என்னும் விதிப்படி மை நீங்கியது.
  • பசு + இலை - பாசு + இலை - 'ஆதி நீடல்' என்னும் விதிப்படி ப, பா என்றானது.
  • பாசு (ச் + உ) + இலை - பாச் + இலை - 'உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்' என்னும் விதிப்படி உ நீங்கியது.
  • பா (ச் + இ) லை - பாசிலை - 'உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி பாசிலை எனப் புணர்ந்தது.

Tamil Grammar Question 8:

பெறு - இச்சொல்லுக்கான வினைமுற்றைத் தேர்ந்தெடுக:

  1. பெற்றான் 
  2. பெற்றவன் 
  3. பெற்று 
  4. பெற்றவர் 

Answer (Detailed Solution Below)

Option 1 : பெற்றான் 

Tamil Grammar Question 8 Detailed Solution

சரியான பதில்: பெற்றான்
Key Points
  • பெறு என்பது பெற்றான் என்பதன் வினைமுற்று ஆகும். 
  • பெற்றான் என்பது வினை எச்சம் ஆகும்.
  • வினைமுற்று: 
    • ஒரு செயல் முடிந்ததை குறிக்கும் சொல் வினைமுற்று எனப்படும்.
    • இது திணை, பால், எண், இடம், காலம் காட்டும் பயனிலையாக வரும்.
    • வினைமுற்று ஆறு வகைப்படும். அவை:
      • தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, உடன்பாடு வினைமுற்று, எதிர்மறை வினைமுற்று, ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று.
Additional Information
  •  பெற்றவன்,பெற்றவர் என்பது பெயரெச்சம் ஆகும்.

Tamil Grammar Question 9:

பொருத்துக:
1. பெயரெச்சத் தொடர் – அ) கார்குழலி படித்தாள்.
2. வினையெச்சத் தொடர் – ஆ) புலவரே வருக.
3. வினைமுற்றுத் தொடர் – இ) பாடி முடித்தான்.
4. எழுவாய்த் தொடர் – ஈ) எழுதிய பாடல்.
5. விளித் தொடர் – உ) வென்றான் சோழன்.

  1. 1. ஈ, 2. இ, 3. உ, 4. அ, 5. ஆ
  2. 1. இ, 2. ஈ, 3. அ, 4. உ, 5. ஆ
  3. 1. ஈ, 2. உ, 3. இ, 4.ஆ, 5. அ
  4. 1. உ, 2. இ, 3. ஈ, 4. ஆ, 5. அ

Answer (Detailed Solution Below)

Option 1 : 1. ஈ, 2. இ, 3. உ, 4. அ, 5. ஆ

Tamil Grammar Question 9 Detailed Solution

சரியான பதில்: 1. ஈ, 2. இ, 3. உ, 4. அ, 5. ஆ

Key Points

  • பெயரெச்சத் தொடர் - எழுதிய பாடல்
  • வினையெச்சத் தொடர் - பாடி முடித்தான்
  • வினைமுற்றுத் தொடர் - வென்றான் சோழன்
  • எழுவாய்த் தொடர் - கார்குழலி படித்தாள்
  • விளித்தொடர் - புலவரே வருக

Additional Informationதொகாநிலைத் தொடர்:

  • ஒரு தொடரில் இரு சொற்கள் வந்து அவற்றின் இடையில் சொல்லுருபு மறையாமல் நின்று பொருள் தந்தால் து தொகாநிலைத்தொடர் எனப்படும்.
  • தொகாநிலைத்தொடர் ஒன்பது வகைப்படும்.
  • தொகாநிலைத்தொடர் வகைகள்:
    • எழுவாய்த்தொடர், விளித்தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர், வேற்றுமைத் தொகாநிலைத் தொடர், இடைச்சொல் தொடர், உரிச்சொல் தொடர், அடுக்குத்தொடர்​
  • எழுவாய்த்தொடர்:
    • (எ. கா) மல்லிகை மலர்ந்தது. - இதில் ‘மல்லிகை’ என்னும் எழுவாயைத் தொடர்ந்து ‘மலர்ந்தது’ என்னும் பயனிலை அமைந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இஃது எழுவாய்த் தொடர் ஆகும்.
  • பெயரெச்சத் தொடர்:
    • (எ. கா) வரைந்த ஓவியம். - இதில் ‘வரைந்த’ என்னும் எச்சவினை ஓவியம்’ என்னும் பெயர்ச்சொல் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது பெயரெச்சத்தொடர் ஆகும்.
  • வினையெச்சத் தொடர்:
    • (எ. கா) தேடிப் பார்த்தான். - இதில் ‘தேடி’ என்னும் வினையெச்சசொல் ‘பார்த்தான்’ என்னும் வினைமுற்றுச்சொல் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது வினையெச்சத் தொடர் ஆகும்.
  • வினைமுற்றுத் தொடர்:
    • (எ. கா) சென்றனர் வீரர். - இதில் ‘சென்றனர்’ என்னும் வினைமுற்று ‘வீரர்’ என்னும் பெயரைக் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது வினைமுற்றுத் தொடர் ஆகும்.
  • விளித்தொடர்:
    • (எ. கா) நண்பா படி. - இதில் ‘நண்பா’ என்னும் விளிப்பெயர் ‘படி’ என்னும் பயனிலையைக் கொண்டு முடிந்து, இடையில் எச்ல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது விளித்தொடர் ஆகும்.

Tamil Grammar Question 10:

அகரவரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக:

  1. மீமிசை, முந்நீர், மொழிபெயர்ப்பு, மேடு பள்ளம், மனத்துயர்
  2. மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடு பள்ளம், மொழிபெயர்ப்பு
  3. முந்நீர், மீமிசை, மனத்துயர், மொழிபெயர்ப்பு, மேடு பள்ளம்
  4. மனத்துயர், மேடு பள்ளம், முந்நீர், மீமிசை, மொழிபெயர்ப்பு

Answer (Detailed Solution Below)

Option 2 : மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடு பள்ளம், மொழிபெயர்ப்பு

Tamil Grammar Question 10 Detailed Solution

சரியான பதில்: மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடு பள்ளம், மொழிபெயர்ப்பு 
Key Points
  • மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடு பள்ளம், மொழிபெயர்ப்பு என்பதே சரியான அகரவரிசைப்படி அமைந்துள்ளது. 
Additional Information
  • மீமிசை என்றால் மலை உச்சி, மேலே என்று பொருள்.
  • முந்நீர் என்பதன் பொருள் கடல் ஆகும்.
Get Free Access Now
Hot Links: teen patti master 2025 teen patti refer earn teen patti game paisa wala teen patti master update